பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான முதலாவது டெஸ்ட் அடுத்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணி வருகிற 18-ந்தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான முகமது அமிரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முகமது அமிர் 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாடிய போது தான் சூதாட்டத்தில் சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட அவர் 3 மாதங்கள் இங்கிலாந்தில் சிறைவாசம் அனுபவித்தார். கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. தடை முடிந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்பினார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் அணிக்கும் தேர்வாகி இருக்கிறார்.
ஆனால், இங்கிலாந்தில் முகமது அமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதால் அவருக்கு ‘விசா’ வழங்க இங்கிலாந்து தயக்கம் காட்டியது. கருணை காட்டும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவருக்கு ஓரிரு நாட்களில் விசா கிடைத்து விடும் எனறு எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தெரிவித்தார்.
இதே போல் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவுக்கு அந்த தடை காலம் மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. இதன் காரணமாக நியூசிலாந்து தொடர், 20 ஓவர் ஆசிய கோப்பை, உலக கோப்பை போட்டிகளில் அவரால் ஆட முடியவில்லை. அவரும் அணிக்கு திரும்புகிறார். அகமது ஷேசாத், சோயிப் மாலிக், ஜூனைட் கான் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி :-
முகமது ஹபீஸ், ஷான் மசூத், சமி அஸ்லாம், மிஸ்பா உல்-ஹக் (கேப்டன்), யூனிஸ்கான், அசார் அலி, ஆசாத் ஷபிக், இப்திகார் அகமது, சர்ப்ராஸ் அகமது, முகமது ரிஸ்வான், ஜூல்பிகர் பாபர், யாசிர் ஷா, வஹாப் ரியாஸ், முகமது அமிர், ரஹத் அலி, இம்ரான் கான், சோகைல் கான்.
இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான முகமது அமிரும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முகமது அமிர் 2010-ம் ஆண்டு இங்கிலாந்தில் விளையாடிய போது தான் சூதாட்டத்தில் சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட அவர் 3 மாதங்கள் இங்கிலாந்தில் சிறைவாசம் அனுபவித்தார். கிரிக்கெட்டில் இருந்து 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. தடை முடிந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்பினார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் அணிக்கும் தேர்வாகி இருக்கிறார்.
ஆனால், இங்கிலாந்தில் முகமது அமிர் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதால் அவருக்கு ‘விசா’ வழங்க இங்கிலாந்து தயக்கம் காட்டியது. கருணை காட்டும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவருக்கு ஓரிரு நாட்களில் விசா கிடைத்து விடும் எனறு எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தெரிவித்தார்.
இதே போல் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷாவுக்கு அந்த தடை காலம் மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது. இதன் காரணமாக நியூசிலாந்து தொடர், 20 ஓவர் ஆசிய கோப்பை, உலக கோப்பை போட்டிகளில் அவரால் ஆட முடியவில்லை. அவரும் அணிக்கு திரும்புகிறார். அகமது ஷேசாத், சோயிப் மாலிக், ஜூனைட் கான் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி :-
முகமது ஹபீஸ், ஷான் மசூத், சமி அஸ்லாம், மிஸ்பா உல்-ஹக் (கேப்டன்), யூனிஸ்கான், அசார் அலி, ஆசாத் ஷபிக், இப்திகார் அகமது, சர்ப்ராஸ் அகமது, முகமது ரிஸ்வான், ஜூல்பிகர் பாபர், யாசிர் ஷா, வஹாப் ரியாஸ், முகமது அமிர், ரஹத் அலி, இம்ரான் கான், சோகைல் கான்.
No comments:
Post a Comment