வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-ந்தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 188 ரன்னில் சுருண்டது.
தென்ஆப்பரிக்கா குறைந்த ரன்னில் ஆல் அவுட்டாக எதிரணியின் சுனில் நரைன் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். நரைனின் வருகை ஆஸ்திரேலியாவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தொடர் எளிதாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா நினைத்திருக்கலாம். ஆனால் ஸ்லோ மற்றும் டர்ன் ஆடுகளத்தால் நரைன் கலக்கி விட்டார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவரது தாக்கம் அதிகமாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா நினைக்கிறது.
இதனால் அவர் மீது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஒரு கண் வைத்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறுகையில் ‘‘நரைனுக்கு எதிராக ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தனிப்பட்ட வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் பார்த்த வகையில் அவர் ஒரு திறமையான பந்து வீச்சாளர் அத்துடன் விதியாசமான திறனை பெற்றுள்ளவர். அவர் எப்படி பந்து வீசி விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார் என்பதை தற்போது பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் பார்த்திருப்பார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் சூழ்நிலையில் அதிகபட்ச ரன்களை குவிக்க இயலாது. குறிப்பாக மிடில் ஓவர்களில் சுழற்பந்தை எதிர்த்து ரன் அடிப்பது கடினம். இதனால் மோசமான பந்துகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால், பேட்ஸ்மேன்கள் அடிக்கடி ஸ்ட்ரைக் மாறுவதற்கு முயற்சி செய்வோம்’’ என்றார்.
No comments:
Post a Comment